மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றவரால் பரபரப்பு

வீட்டின் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வீட்டின் முன்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த நபர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் காஜா ஹூசைன். தள்ளு வண்டி வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டின் முன்பு சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டின் முன்பு ஆட்டோ ஸ்டாண்டு அமைந்திருப்பதால் இடையூறு ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்ற வேண்டும் என்றும் ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகளிடம் காஜா ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், இதனால் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்யும் தனது தொழில் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று காலை மண்ணெண்ணெய் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் காஜா ஹூசைனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பொதுவாக, குறைதீர்ப்பு கூட்ட நாட்களின் போது ஆட்சியர் அலுவலகம் வரும் மக்களை முழுமையாக பரிசோதித்த பிறகே அவர்களை போலீசார் அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் மறுவரை ஆணைய மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த பாதுகாப்புகளை மீறி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...