பள்ளிகளில் இந்தி மொழியையும் பாடமாக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி

மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சருக்குத் தபால் அனுப்பும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை: மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சருக்குத் தபால் அனுப்பும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. 

தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

இந்த நிலையில் மற்ற மாநிலங்களைப் போல இந்தி மொழியையும் சேர்த்து மும்மொழி கல்வித்திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சார்பில் தமிழக முதல் அமைச்சருக்குத் தபால் அனுப்பப்பட்டது. 

இது தொடர்பாக, அக்கட்சியினர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

இந்தியா முழுவதும் மும்மொழி கல்வித்திடம் நடைமுறையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் கல்வி கற்கின்றனர். இந்தி மொழி வெறுப்புணர்வு கொண்டவர்களின் அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் இங்கு மட்டும் இரு மொழி கொள்கை மட்டுமே நடைமுறையில் உள்ளது. 

இந்தக் கொள்கை காரணமாக நவோதய பள்ளிகள், மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் பள்ளிகளுக்கான நிதிகள் தமிழகத்திற்கு வருவதில்லை. இதனால், தமிழக மாணவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர். எனவே, இருமொழிக் கல்விக் கொள்கையை கைவிட்டு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும். 

மேலும், தமிழகத்தில் ஆரம்ப கல்வியை தமிழ்க் கல்வியாக மட்டுமே அமல்படுத்த வேண்டும். உயர்கல்வியைத் தமிழில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...