வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்: மாநில தேர்தல் ஆணையர் பங்கேற்பு

உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை: உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் முறை தற்போது நடைபெற்று வருகின்றது. வார்டுகள் மறுவரையறை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான மண்டல அளவிலான கூட்டம் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கருத்துக்களை மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், எல்லை மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் ராஜசேகர், நகராட்சிகள் நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டறிந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என தனித்தனியே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், எல்லை மறுவரையறை கருத்துகேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டங்களில், பெயரளவிற்கு நடத்தப்பட்டதாகவும், இப்போது, மண்டல அளவிலான கருத்துகேட்பு கூட்டத்திலாவது, பொதுமக்களின் முறையான கருத்துக்களை பதிவு செய்து சீர்ப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...