பட்ஜெட்டில் புதிய ஊக்கத்தொகை இல்லாதது ஏமாற்றம் : தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.



பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றமளிப்பதாகத் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் கே.கே.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

புதிய பட்ஜெட்டில் வேளாண் வருவாயினை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகள் தரமான வேளாண் பம்ப்செட் சந்தையினை மேம்படுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் 99 நகரங்களை மேம்படுத்த ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் நகரங்களுள் ஒன்றான கோவைக்கு மிகுந்த பயனளிக்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...