வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். 

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமானக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. கருப்புப் பண தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது. ஜனவரி 15, 2018 வரையிலான காலத்தில் நேரடி வரி வளர்ச்சி விகிதம் 18.7%ஆக உள்ளது.

தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். 

வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூல் ஆகவில்லை என்பதால் உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படாதது, வரி செலுத்துவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...