ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டம் : சுயிட்ஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம்

கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


கோவை : கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் தொழில்மையங்களைக் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். இங்கு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் என்பது மிகக் கடினமாக ஒன்றாக உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் கோவை மாநகராட்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுடைய இந்தத் திட்டத்திற்கு சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 24*7 என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், 1,200 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 1,50,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தைப் பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்ட நிலையில், சுயிட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் மாவட்டத்திற்கு முதல்முறையாக குடிநீர் விநியோகத் திட்டத்தை சுயிட்ஸ் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து,  மெட்ரோநகரங்களான பெங்களூரூ, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தங்களது பணியை மேற்கொண்டுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...