மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு : ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு உற்பத்தி விலையில் இருந்து ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் எனவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே காணப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் ஒகி புயல் பேரிடர் நிவாரண நிதிகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இல்லை. வருமான வரி உச்சவரம்பு உயர்வு மற்றும் வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயர்வு போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

மேலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன..? அப்போது வெளியிட்ட அறிவிப்புகள் என்ன..? எனவே, பா.ஜ.க. அரசு ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...