திருப்பூர் பனியன் குடோனில் திடீர் தீ ! : பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் தீயில் கருகி நாசம்

திருப்பூரில் பனியன் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி வீணாகின.

திருப்பூர்: திருப்பூரில் பனியன் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி வீணாகின. 



காங்கேயம் சாலையில் வசித்து வருபவர் ஜாபர். இவர் கோம்மைத்தோட்டம் செல்லாண்டியம்ன் கோவில் அருகில் பனியன் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல குடோன் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர் இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் பரவியது. 



இது குறித்து அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்தத் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் தீயில் கருகி சேதமானதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...