விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு என்பது கண் துடைப்பு நாடகம் - பி.ஆர் பாண்டியன்

கோவை:  பயிர் சேதங்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல், விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்து முடித்த இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விவசாயத்திற்கு நிதி இதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " விவசாயத்திற்கு பணம் ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம். விவசாய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. நதிகளை தேசிய மயமாக்காமல் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை. 

நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் விவசாயம் செழிக்காது. மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. இந்த பட்ஜெட் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும்." என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...