பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகை

ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார். 

மனிதகுல ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து மகான் அரவிந்தர் எழுத்துகளில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1966-ல் ஆரோவில் குறித்த திட்டம் யுனெஸ்கோ பொதுசபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 

அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. ஆரோவில் சர்வதேச நகரம் புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வரும் 28-ம் தேதி ஆரோவில் நகரம் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில், ஆரோவில் உதய தினாவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக புதுச்சேரி மாநில பா.ஜ.க., தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி வருவது குறித்து பிரதமர் அலுவலகதில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....