நீலகிரியில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



மலை மாவட்டமான நீலகிரியில் பசுமையைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், உதகையின் முக்கிய பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில், பெரும்பாலான கடைகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மேலும், நீலகிரி மாவட்டத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரசுரங்கள் அவ்வப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.



இதன் தொடர்ச்சியாக, உதகை மார்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை இன்று (பிப்.,02) மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...