சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

கோவை: உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. 



உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்களின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் நடைபெற்றது. சிங்காநல்லூர் குளக்கரை அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சதீஷ் மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இதன் ஒருபகுதியாக சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை நவக்கரை அடுத்துள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு துவங்கிய இப்பேரணியை இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் வனிதா மோகன் துவக்கி வைத்தார். பேரணியில், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். 

வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக சென்ற பேரணி வ.ஊ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்தப் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...