இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்

கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது.

கோவை சுப்பிரமணிய பாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் முபாரக், சுபைர், சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில், அபுதாகீர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலனி பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்து முன்னணி சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், சசிகுமார் கொலைக்கு பின்னணியில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டுள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை எஸ்.பி குமார் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ள அதிகாரிகள், சசிகுமார் கொலை குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். புதிதாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள முபாரக், சதாம் உசேன், சுபைர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவிய அபுதாகீரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

கொலை நடந்து ஓன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகுமார் கொலை வழக்கை, தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும்தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து இருப்பதால், இந்த வழக்கில் பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...