ஓடும் ரயிலில் தமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதைதொடர்ந்து, சனுஷா டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர், போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

ஆபாசமாகப் பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு ஓடும் ரயில் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...