”ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை வளையத்தில் நடிகர் ஆதி மற்றும் சிவசேனாபதி”

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கோவை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் மூன்று நாட்கள் கோவையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்றைய விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, கூறியதாவது, கோவையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேர் மட்டும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. கோவையில் மொத்தம் 50 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதில் 35 பேர் ஆஜராகியுள்ளனர். இனிமேல் ஆணையம் விசாரிக்க விரும்பும் சிலருக்கு மட்டும் சம்மன் அனுப்பப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திகேய சிவசேனாபதி, நடிகரும், இசையமைப்பாளருமான ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர். கோவையில் உதவி ஆணையர் ரமேஷ்குமார் நேற்று 5.30 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அடுத்ததாக, மதுரையில் விசாரணை நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். 

மேலும், சென்னையில் ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என போலீஸ் உயர்அதிகாரிகள் தற்போது வரை கூறி வருகின்றனர். இது, தீவைத்த பெண் காவலரை மறைப்பதாகவே தெரிகின்றது.  போலீஸாரிடம் விசாரணை நடத்தும் போது அவர்களிடம் இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...