ஐ லீக் கால்பந்து போட்டி தொடரில் இக்கட்டான நிலையில் சென்னை அணி : பயிற்சியாளர்

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டித் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டித் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகளில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகா கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை கால்பந்து அணி தனது சொந்த மைதானத்தில் இதுவரை வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. 10 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணி, கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்வால் கால்பந்து கழக அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.

இந்த நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.  அவர் கூறியதாவது, நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகமிருந்தும் வெற்றி பெறாதது துரதிர்ஷ்டம். கடந்த போட்டியில் கோல் அடித்தும், அதை நடுவர் ஆப்சைடு எனக் கூறியதால் 3 புள்ளிகளை இழக்க நேரிட்டது. இது முழுக்க முழுக்க நடுவரின் தீர்ப்பு. 3 புள்ளிகளை இழந்ததால் பின் தங்கி உள்ளோம். நாளைய போட்டியில் வீரர்கள் முழு மூச்சுடன் விளையாடி வெற்றி பெற முயல்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார். 

இதைத் தொடர்ந்து, ஆஸ்வால் கால்பந்து கழக அணியின் பயிற்சியாளர் பவுலோ மெனான்சோ கூறும்போது, நாளைய போட்டியில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும், சென்னை அணியில் சிறப்பாக விளையாடக் கூடிய நான்கு, ஐந்து வீரர்கள் உள்ளனர். எனவே, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். நாளை மதியம் 3 மணிக்கே போட்டி துவங்க உள்ளதால், அதற்கு தகுந்தாற்போல் வீரர்கள் தயாராகி வருகின்றனர். என்றார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....