பாப்பீஸ் ஓட்டலில் 5 நாட்கள் நடக்கும் கேரள உணவுத் திருவிழா இன்று தொடக்கம்

கோவையில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் கேரள பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம் பெறும், உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை : கோவையில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் கேரள பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம் பெறும், உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.



கேரளாவின் முக்கிய திருவிழாவான விஷுவையொட்டி, இந்த உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் 67 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. உடனடியாக தயாரித்து பரிமாறும் 5 உணவு கவுண்டர்களும் உள்ளன. 

உலக மற்றும் தேசிய அளவில் புகழ்வாய்ந்த தலைமை சமையல் கலைஞர் ராஜாதான் இவ்விழாவில் சிறப்பாளராக பங்கேற்கிறார். இவரும், இவரின் குழுவினரும் கேரள மாநிலத்தின் தலைசிறந்த உணவுகளைத் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளனர். இவர், தென்னிந்திய உணவுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



உணவுத் திருவிழாவில் பரிமாறப்பட உள்ள சில உணவுகள் : கோழி, மீன், செம்மீன் ஊறுகாய் இஞ்சிபுளி, மலபார் நண்டு சாரு, பச்சை மாங்கா மிலகு பொடி இட்டது, மத்தி மீன் பிரை, வழுதலங்கா அரைச்ச கறி, மதுரம் கறி, தலச்சேரி கோழி பிரியாணி சக்க பிரதமன், இதைத் தவிர, அப்பம், மலபாரி பரோட்டா, மீன் பொல்லிச்சது பதிதிரி, பழம்பொரி ஆகியவை லைவ் கவுண்டர்களில் உடனடியாக தயாரித்து வழங்கப்படும். 

இந்த உணவுத் திருவிழா நடைபெறும் திறந்தவெளியில் நீர்நிலைகளில் கேரள மாடல் படகுகள் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த அலங்காரம் திருவிழாவிற்கு வருவோரைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழா இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை தினமும் இரவு 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது. விழாவில் பங்கேற்க ஒருநபருக்கு ரூ. 799 கட்டணமாகப் பெறப்படும். மேலும், 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படும்.  

இன்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவை கோவை வுமன்ஸ் சென்டர் மருத்துவ இயக்குநர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...