உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.  பேருந்து நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சிக்னலை கடந்து சென்று கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பாலக்காடு சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்றது. அப்போது, சுங்கம் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முன்புற சக்கரம் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்தை நகர்த்தி வைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர். இதில், சதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிபிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணம் அரசுப் பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவு தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...