இந்த ஆண்டுக்குள் தனியார் மயமாகிறது ஏர் இந்தியா நிறுவனம்

ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

ஏர் ஏசியா உள்ளிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏர் இந்தியா யாருக்கு விற்கப்படும் என்பது ஜூன் மாத இறுதியில் தெரியவரும் என்றும், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனைத் தனியார் நிறுவனத்துக்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிகமான அளவுக்குக் கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...