நாளை ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கணினிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. கணினி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணினியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை ரயில்வே சேவையில் பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நாளை மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், நாளை இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே, ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணினியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...