திருப்பூரில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துகள்: சிலிண்டர் வெடித்து 8 குடிசைகள் எரிந்து சேதம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே சிலிண்டர் வெடித்ததில் எட்டு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.



ஊத்துக்குளி சாலையிலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் ராமசாமி என்பவர்களுக்கு சொந்தமான எட்டு குடிசை வீடுகள் உள்ளன. இன்று மாலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்கு சென்றிருந்த வேளையில், வீட்டிலிருந்த குழந்தைகள் கியாஸ் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்த வீடுகளில் தீப்பிடித்து அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்துள்ளன. இதனால், எட்டு குடிசை வீடுகளும் முற்றிலும் தீக்கிரையானது.



இதனையடுத்து, தகவலறிந்து மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தின் காரணமாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....