டாக்டர் பாபு ராணி-க்கு தொழில் நுட்ப சிறப்பு விருதை வழங்கியது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்

2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

கோவை: 2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.



நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...