வேளாண்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பணியினை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களை பணி நியமன முகமை (JOB CONSULTANCY) மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பணி நியமன முகமைகள் நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் அனுபவங்களைத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். வரும் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விவரங்கள் வந்தடைய வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக தேர்வு செய்து வழங்க வேண்டும். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...