நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வினால் தமிழக ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று கோரியும், இந்த தேர்விலிருந்து தமிழக மானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம மற்றும் எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...