மணல் குவாரிகளை மூடுவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை மூடுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. 

முன்னதாக, மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த நவம்பர் 29-ம் தேதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், மணல் குவாரிகள் அனைத்தையும் படிப்படியாக 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...