பல்லடம் அருகே வைக்கோல் தட்டு ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார். 



இந்த நிலையில், லாரி பொங்கலூர்- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பியுடன் உராய்ந்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், காமநாய்ககன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கம்பி உரசியதால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...