மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்

மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை: மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி துவங்கப்பட உள்ளது. 

இதனை, சுய தொழில் செய்யும் பெண்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்ட 18 முதல் 40 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான இன்று மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். 

இத்திட்டத்தின் படி இரு சக்கர வாகன பெற தகுதி பெறுபவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...