விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்த ஏ.ஏ.ஐ.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பேட்மிண்டன், செஸ், கோ-கோ, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் அளவில் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான ஒரு அறிவிப்பை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட போட்டிகளில், விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான வீரர்களைத் தேர்வு செய்து, இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, தேவையான பயணப்படிகள், மாதப்படிகள் என அனைத்து செலவுகளுக்கும் தொகை வழங்கப்படும். 

இதேபோல, 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாடி வருபவர்கள், விமானப் போக்குவரத்து துறையில் தற்காலிக ஊழியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். பின்னர், திறமை மற்றும் பணி வாய்ப்பின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக பணிமாற்றம் செய்யப்படுவர். தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 19-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...