நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை : நீட் தேர்வில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெறும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால்  பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக, நீட் தேர்விற்கு மாணவர்களைத் தயார்படுத்த 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் போட்டி தேர்வை சந்திக்க தேவையான வசதிகளையும் ஏற்படுத்துவதோடு, மொபைல் ஆப் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சி மையங்களில் 70,420 பேர் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டு, பென் டிரைவ் மூலம் பயிற்சி அளிக்கப்படும். 

2,000 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சென்னையில் 18 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெறும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்படுவார்கள். அதேவேளையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையில் மாற்றமில்லை. இருப்பினும், மத்திய அரசு கொண்டுவரும் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். நீட் தேர்விற்காக 412 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளிக்கின்றது.

ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறை வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றது. மேலும், "கனவு ஆசிரியர் விருது" பெறுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கை  பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு, அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....