புகழ்பெற்ற பூச்சு காளை ”புல்லிபாய்” இயற்கை எய்தியது

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்” காளை இயற்கை எய்தியது.

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்”  காளை இயற்கை எய்தியது. 



1998-ல் பிறந்து 2001-ல் இருந்து பூச்சு காளையாக செயல்பட்ட புல்லிபாய், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் பொக்கிஷமாக திகழ்ந்தது. உலகத்தில் அதிகமாக படம் பிடிக்கப்பட்ட காளை புல்லிபாய் (#bullyboy). வயது முதிர்ச்சியின் காரணமாக, இந்த மண்ணை விட்டு பிரிந்த புல்லிபாயின் மறைவிற்கு ஜல்லிக்கட்டு பிரியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். விரைவில், புல்லிபாய் காளைக்கு நினைவுச்சின்னமும், அருங்காட்சியமும் ஏற்படுத்தப்படும். 



உன் உடல் அழகில் இனி கிடைப்பது மிகமிக அரிது... நீ ஒரு தனிப்பிறவி... நீ வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்... நீ வாழ்ந்த இடமும் ஒரு அரசனிடம், உன் பெருமை என்றும் மறையாது..      

காங்கேய வாம்சத்தின் கட்டழகு சிம்மமே

இளைஞரின் மனத்தினிலே இளைக்காத தங்கமே

ஈடில்லா அழகோடு இதயத்தில் வாழ்ந்தாலும்

இமயத்தின் உயரத்தை இன்புகழால் உடைத்தாலும்

மரணத்தின் வாயிலிலே மனம்நொறுங்க செய்தாயே

எத்தனையோ படைப்புக்கள் என்மனத்தில் உதித்தாலும்

அத்தனைக்கும் தகப்பனாய் ஆண்மகனே நீயிருக்க

நெஞ்சத்தின் நினைவுகளோ நொடியினில் உடைந்ததுவே

கம்பீர நடையிட்டு காடெல்லாம் நீடக்க

காண்போரின் கண்களும் கனப்பொழுதில் விரிந்திடுமே

மீண்டும் காண்பேனோ, மீளாத உன்நடையை

திமிலின் சிறப்பினிலே, திக்கெட்டும் ஆண்டவனே

திரும்ப காண்பேனே, திகட்டாத நின்அழகை

வையத்தின் பரப்பினிலே, வானவில்லாய் திரிந்தவனே

உயரிய கொம்புகளை உயர்த்தியே நீநடக்க

காதலித்த பூமிமகள் கரம்கொண்டு அணைத்தாளோ

இருபது அகவையிலே இடம்விட்டு மறித்தவனே

மண்ணின் மடியினிலே மாசின்றி நீயுறங்க

மானிட மனத்தினிலே மன்னனாய் வாழ்ந்திடுவாய்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...