மதுரை ஆதின விவகாரம்: நீதிமன்ற எச்சரிக்கைக்குப் பணிந்தார் நித்யானந்தா

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார்.

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார். 

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழையத் தடை விதிக்க வேண்டும் என ஜெகதலபிரதாபன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2012ல் மதுரை ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒரு முறை ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார். அந்த நியமனத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஏனென்றால், 292-வது ஆதீனம் இருக்கும்போதும், 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன்’ என்றும் எச்சரிக்கை செய்தார். மேலும், வருகிற புதன்கிழமைக்குள் நித்யானந்தா சரியான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்’ எனவும் நீதிபதி கூறினார். 

அப்போது நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர், ‘புதன்கிழமைக்குள் பதில் மனுவை தாக்கல் செய்துவிடுவோம்’ என்று கூறினார். இந்த நிலையில், இன்று மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்பப் பெறுவதாகவும், மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...