கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உட்பட மூவர் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....