கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது 'பாடி ஒன் காமிரா'

கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.

கோவை : கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.  



போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. 

அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். 

இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் காமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த காமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு  அறைகளுக்கு அனுப்பப்படும்.

அந்தந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் காமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. 

போலீசாரை கண்காணிக்கும் இந்த திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இது போன்ற காமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சமீபத்தில்  நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் காமிரா'வை உபயோகிக்கத் தொடங்கினர்.

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த காமிராக்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து டிரையல் அடிப்படையில் போக்குவரத்து போலீசாருக்கு இந்த காமிரா வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், " 'டிரையல்' (Trial) அடிப்படையில் ஒரே ஒரு 'பாடி ஒன் காமிரா'  வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான வரவேற்பு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் மற்ற போலீசாருக்கும் இந்த காமிரா வழங்கப்படும்" என்றார்.

நாளை முதல் செயல்பட இருக்கும் இந்த காமிராவுக்கு கோவை மாநகர மக்கள் எவ்விதமான வரவேற்பை தருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...