யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீராவி எஞ்சினை மீண்டும் இயக்க முடிவு

யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 



1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் உதகை மலை ரயில் பாதையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் (எண் 37384) இழுவை திறன் குறைந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஞ்சினுக்கு ஓய்வளிக்கப்பட்டு குன்னூர் மலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழமை வாய்ந்த புராதான முக்கியத்துவம் பெற்ற இந்த ரயில் எஞ்சின் பெருமையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்வதோடு, பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து, குன்னூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இந்த எஞ்சின் கொதிகலன் சோதனை செய்யப்பட்டு, இழுவை திறன் கண்டறியப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், சோதனை ஓட்டம் திருப்தியாக இருப்பின் ரயில்வே வாரிய ஒப்புதலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...