சிகிச்சைக்கு வந்த சிறுவனை தாக்கியதாக மருத்துவர் மீது போலீஸில் புகார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

குறிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சவேணியின் மகன் சரண். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது மருத்துவர்களால் தாக்கப்பட்டதாகவும், தகாத வார்த்தைகளால் மருத்துவர்கள் பேசியதாகவும் அவரது தாயார் அம்சவேணி பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், மருத்துவமனை உயர்அதிகாரிகளிடம் பேசி தகாத வார்த்தைகளால் பேசிய மருத்துவரை தண்டிப்பதாக கூறி புகார்தாரர் அம்சவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரிடம் சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து சிறுவனின் தாயார் கூறும்போது, நோயாளிகளிடம் இரக்கம் காட்டவேண்டிய மருத்துவர்கள் இதுபோல் நடந்தது ஏற்புடையதல்ல. சிகிச்சைக்காக வந்த என் மகனை தகாத வார்த்தையில் பேசி அடித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தோடு மருத்துவமனை முன்பு தற்கொலை செய்து கொள்வோம். என்றார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...