முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ., ஆவணங்கள்: அதிர்ச்சி தகவல்

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.,யின் ரகசிய ஆவணம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் பல்வேறு விசாரணைகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் எவ்வித ஆவணங்களும் எடுத்துச் செல்லப்படவில்லை என சிதம்பரம் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., நிலவர அறிக்கையின் நகல் சிதம்பரம் வீட்டில் இருந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 2013ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகும். இது சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். இவ்வாறான ரகசிய ஆய்வறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. 

ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குத் தொடர்பிருப்பதாக வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...