பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட தற்காலிக குழு நியமனம்

துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை: துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 



பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிண்டிகேட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

கூட்டத்திற்குப் பிறகு முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை வேந்தர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையே திருப்திகரமாக உள்ளது. துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும். துணைவேந்தர் முறைகேடுகளை தடுக்க மேல்மட்டத்தில் இருந்தே சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் அரசு மற்றும் அமைச்சர் தலையீடு இல்லை. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மீது முறைகேடு புகார்கள் எழுகின்றன. அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டியதில்லை. பல்கலைக்கழகங்களில் தணிக்கை தடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணபதியைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் தர்மராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இன்று தேர்வு செய்யப்பட்ட தனது தலைமையிலான நிர்வாக குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும். எனது தலைமையிலான அந்தக் குழுவில் பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு நிர்வாக குழுவாக செயல்படுவர். துணைவேந்தருக்கான அதிகாரங்கள் இந்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...