பல்லடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம்: காஞ்சிபுரத்தில் போதகர் கிதியோன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் திருப்பூர் மாவட்ட தலைவர் தமிழ்முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் அடையாளச்சேரியில் போதகர் கிதியோனை படுகொலை செய்த மதவாத சக்திகளை கண்டித்தும், பல்லடம் சரகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்படுவது போன்ற செயல்களைக் கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்துவ சமூக நீதிப்பேரவை மற்றும் பல்லடம் சரகம் அனைத்து போதகர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின் போது, சபை ஊழியர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், கொலைவெறித் தாக்குதல் மீதான நடவடிக்கை, சிறுபான்மையின மக்கள் மீதான மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் பாவரசு, மாநில து. செயலாளர் கிப்டன் டேவிட்பால் உட்பட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...