தெர்மாகோலுக்கு செல்லூர் ராஜு, சோப்பு நுரைக்கு கருப்பண்ணன்., இப்போது, மக்கள் தொகைக்கு செங்கோட்டையன்..!

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

தேக்கி வைக்கப்பட்ட நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல்களை பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தால் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. " கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வருகிறது" என்று கூறி அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கவைத்துப் பிரபலமடைந்தவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன். 

மக்கள் நலப்பணிகள் செய்து பிரபலமான அமைச்சர்களைக் காட்டிலும், இது போன்று வேடிக்கையான கருத்துக்களாலும், திட்டங்களாலும் பிரபலமான அமைச்சர்களே அதிகம். அந்த வரிசையில் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இடம் பிடித்துள்ளார். 

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " இந்தாண்டு 8 லட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காகக் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 'காப்பி' அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் பறக்கும்படை மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். " என்றார். 

தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர். அதற்கு, " மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் " என்று அடேங்கப்பா பதிலை கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். 

அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், " வரும் கால கட்டங்களில் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்தரம் மேம்படும். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் " என்று கூறி எஸ்கேப் ஆனார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...