கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த முருக பக்தர் : 12 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.

திருப்பூர் : கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார். 



தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார். 

இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...