குன்னூர் தனியார் எஸ்டேட்டில் குட்டி யானை பலி

நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



குன்னூர் சரகம் வண்டிசோலை பிரிவு லேம்ஸ்ராக் காவல்பகுதிக்கு உட்பட்ட சிங்காரா தனியார் தேயிலை தோட்டத்துக்கு சொந்தமான கீழ் சிங்காரா  தேயிலை தோட்டத்தில் ஆண் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது நேற்று கண்டறியப்பட்டது. மாவட்ட வனஅலுவலர் உத்தரவு படி, வனச்சரகர் பெரியசாமி தலைமையில், ஜெகதளா கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், குட்டி யானையின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகாக அனுப்பபட்டது.

வனஊழியர்கள் கூறும் போது, ‘இறந்த ஆண் குட்டி பிறந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். எதனால் இறந்தது என்பது குறித்து அதன் உடல் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தெரிய வரும்’ என்றனர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...