இறந்த குட்டியை விட்டு விலகாத யானை : 3-வது நாளாக நீடிக்கும் பாசப் போராட்டம்

நீலகிரியில் இறந்து 2 நாட்கள் ஆன நிலையிலும் குட்டியின் சடலத்துக்கு அருகிலேயே தாய் யானையை பாசப்போராட்டம் நீடித்து வருகிறது.


நீலகிரி : நீலகிரியில் இறந்து 3 நாட்கள் ஆன நிலையிலும் குட்டியின் சடலத்துக்கு அருகிலேயே தாய் யானையை பாசப்போராட்டம் நீடித்து வருகிறது. 

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்த்தனர்.  அப்போது, தாய் யானையும், மற்றொரு பெண் யானையும் இறந்த குட்டி யானையின் அருகே நின்றிருந்தது. ஆண் யானை ஒன்று சற்று தூரத்தில் நின்றிருந்தது.

தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.   இந்நிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள கால்நடை மருத்துவருடன் வனத்துறையினர் 2-வது நாளாக இன்று நெல்சன் எஸ்டேட் சென்றனர். ஆனால், தாய் யானை, யாரையும் தன்னுடைய குட்டியை நெருங்க விடாமல் துரத்தியது. இதனால், வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து சரகர் காந்தன் கூறும்போது, ‘இரண்டாம் நாளாக தாய் யானை அப்பகுதியிலிருந்து விலகாமல், இறந்த குட்டியை பாதுகாத்து நிற்கிறது. இதனால், நாங்கள் திரும்பி விட்டோம்.’ என்றார். 

இறந்து 3 நாட்களாகியும் குட்டியை விட்டு பிரியாத தாய் யானையின் போராட்டம் அனைவரின் மனதையும் உருக்கும் வகையில் இருந்தது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...