காவல்துறையினரின் குடியிருப்பில் தீவிபத்து

திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கான குடியிருப்பு வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டி பிளாக்கில் 11- வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.



இந்த நிலையில், நேற்று மாலை கேஸ் அடுப்பில் ராஜசேகரின் மனைவி சமையல் செய்துகொண்டிருந்த போது அவரது குழந்தை கேஸ் டியூப்பை இழுத்துவிட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ராஜசேகரின் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தீ அணைக்கப்பட்டது.



மாநகர காவலர் குடியிருப்பில் கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...