அணிகள் இணைந்த பின்பு வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும்: அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளினை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளினை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னால் அமைச்சரும், மாநகர மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா-வின் பிறந்த நாளை மாநகரம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர 2-வது மண்டல முன்னால் தலைவர் ஜான் பேசுகையில், " ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் தொடங்கியும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி ஒராண்டாகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வேதனை தெரிவித்தார். அணிகள் இணைந்த பின்பு வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...