பல்லடத்தில் முள்காட்டில் பயங்கர தீவிபத்து : போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 

பல்லடம் மங்கலம் சாலை தெற்குப்பாளையம் பிரிவு அருகே திருப்பூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கடும் வறட்சி காரணமாக விவசாயம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள், முட்கள் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்தக் காட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான முள் மரங்கள், புற்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.



இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...