விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதி விபத்து.!

பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.


திருப்பூர் : பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.

வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சித்ரா(27). விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை மோசமாகவே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதன் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் கோடாங்கிபாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி ஆகியோர் படுகாயமடைந்தனர். 

விபத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சித்ரா-வை வேறு ஒரு ஆம்புலன்சு மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...