சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூரில் சாலைமறியல்

சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே ராயர்பாளையம் அபிராமி நகரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்ககளாக அப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் சாக்கடைக்கழிவு நீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏறப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அபிராமி நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ராயர்பாளையம் - திருப்பூர் சாலை சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர். விரைவில் சாக்கடை கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...