ரேஷன் கடையிலேயே பிளாஸ்டிக் அரிசி..! : அலறும் மக்கள்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

திருப்பூர் 48-வது வார்டு சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் தனது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். 



மாற்றுத்திறனாளியான ராஜா அதேபகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ரூ.1,220 மதிப்புள்ள  25 கிலோ பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை இரண்டு வாங்கியுள்ளனர்.



இதனிடையே நியாய விலைக் கடையில் வாங்கிய அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்த போது கால்பங்கு அரிசியானது தண்ணீரில் மிதந்துள்ளது. இருப்பினும் அரிசியை வேக வைத்து பார்த்த போது பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, அரிசியை உருண்டை செய்து , தீயில் காட்டியுள்ளார். அப்போது அரிசி உருண்டை தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அதே போல் அரிசியை உருட்டி சுவற்றில் அடித்த போது உடையாமல் கல் போல் இருந்ததைக் கண்ட ஜெயமேரி இது குறித்து நியாய விலை கடையில் பணியாற்றும் ஊழியரிடம்  கேட்டுள்ளார், அதற்கு, "இது தரமான அரிசி என்றும், வாங்கிச் சென்ற அரிசியை மாற்ற முடியாது" என்றும் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். 



இது தொடர்பான புகாரின் பேரில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி முருகேஷ் இன்று அந்த நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்தியுள்ளார். 

நியாய விலைக் கடைகளிலேயே பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...