பழங்குடியின இளைஞர் கொல்லப்பட்டத்தை கண்டித்து நீதிமன்றத்தில் கோஷமிட்ட மாவோயிஸ்ட்டால் பரபரப்பு

கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கேரளாவில் உணவுப் பொருள் திருடியதாக பழங்குடியின இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதால் கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் (40), அவரது மனைவி ஷைனி (35), அனூப் மேத்யூ(40), கண்ணன்(40), வீரமணி(42) ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். தேசதுரோகம், கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து கோவை மத்திய சிறையில் ஐவரையும் அடைத்தனர். இதில், ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருசூர் சிறைக்கு மாற்றப்பட்டார் .ஷைனி, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர். 

இவர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை, கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்காக, கேரள மாநிலம் திருசூரில் இருந்து மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை நீதிமன்றத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததும், கேரளாவில் பசிக்காக திருடிய பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவரை அடித்து கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஷைனி, அனூப்மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு வழக்கினை வரும் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பலத்த பாதுகாப்புடன் ரூபேஷை போலீசார் மீண்டும் கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...