கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி : கமல்ஹாசன்

திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி : திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 



மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், அதன் தலைவர் கமல் கலந்து கொண்டு பேசியதாவது :- தாய் சொல்லை தட்டாதவன் நான். அதனால், தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை. எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும், நியாயமும் தெரியும். எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன். 

180 நாளில் கட்சி கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர். திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச்சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன், இவ்வாறு கூறினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...